Sunday, September 20, 2015

தமிழகத்தில் நடப்பது சர்வாதிகாரி ஆட்சி: அன்புமணி ராமதாஸ் பேச்சு

 


பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய மண்டல அரசியல் மாநாடு திருச்சி, பஞ்சப்பூரில் 20.09.2015 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டில் பேசிய அக்கட்சியின் முதல் அமைச்சர் வேட்பாளரான அன்புமணி ராமதாஸ்,

ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் அறிவித்தவைகளில் 90 விழுக்காடுகளை நிறைவேற்றவில்லை. இன்னும் 6 மாதம் இருக்கிறது. என்னிடம் பெரிய பட்டியலே இருக்கிறது. அதை நான் படிக்க வேண்டும் என்றால் ஒன்றரை மணி நேரம் ஆகும். 

தமிழ்நாடு போக்குவரத்துத்துறையை பார்த்து எல்லோரும சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். எனக்கு ஒரு வாட்ஸ் அப் வீடியோ வந்தது. அதில் தமிழக அரசு பேருந்து கேரளா செல்கிறது. கேரளாவில் உள்ள புனலூரில் அந்த பேருந்தில் சென்ற பெண்மணி ஒருவர் பேருந்தில் இருந்து திடீரென்று கீழே விழுந்துவிடுகிறார். நல்ல நேரம் பின்னால் எந்த வாகனமும் வரவில்லை. உயிர் தப்பித்தார். காயம் ஏற்பட்டுள்ளது. இது தமிழக அரசு பேருந்துகளின் நிலை. அரசுக்கு இதுபற்றி எல்லாம் கவலைக்கிடையாது. 600 பேருந்துகள் புதிதாக வாங்கப்பட்டு துருபிடித்து நின்றது. ஏனென்றால் இந்த அம்மா வந்துதான் கொடி அசைக்கனும் என்று நின்றது. 

தமிழகத்தில் நடப்பது சர்வாதிகாரி ஆட்சி. மக்களைப் பற்றி கவலைக்கிடையாது. இந்த அம்மாவுக்கு என்ன பிடிக்கிறதோ அதை செய்யவேண்டும். பிடிக்கவில்லை என்றால் மூடிவிட வேண்டும். புதிய சட்டமன்றத்தை கலைஞர் கட்டினார். இரவு, பகலாக அங்கேயே இருந்து கட்டினார். திறந்து வைத்தார். இந்த அம்மா வந்தாங்க மூடு. ஏன் என்றால் அவங்களுக்கு பிடிக்கவில்லையாம். 1000 கோடி. யார் பணம் அது. நம்ம பணம். அந்தக் கட்டிடத்தை மூடு. இல்லையென்றால் மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்றார்கள். மருத்துவமனை கட்ட வேண்டும் என்றால் திட்டமிட்டு செய்ய வேண்டும். இவங்க என்ன நினைக்கிறார்களோ அதான் நடக்கிறது. சமச்சீர் கல்வியை எடுத்தார்கள். அதில் பாமக போராடி வெற்றி பெற்றுது. 

காவிரியில் தண்ணீர் திறந்து விட மாட்டோம் என்று கர்நாடக அரசு சொல்கிறது. இந்த அம்மா பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். இல்லையென்றால் சட்டமன்றத்தில் தீர்மானம் போடுவார். இலங்கை பிரச்சனையில் தீர்மானம் போட்டதுபோன்று. காவிரிப் பிரச்சனை பற்றி திமுக அதிமுகவுக்கு கவலை இல்லை. கடிதம் எழுதுவார்கள். இல்லையென்றால் சட்டமன்றத்தில் தீர்மானம் போடுவார்கள். இவ்வாறு பேசினார். 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: