Monday, September 7, 2015

தமிழகம் மதுவால் சீரழிந்து வருகிறது: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

பாமக மகளிர் அணி சார்பில் திங்கட்கிழமை இன்று சென்னை சேப்பாக்கத்தில் மது ஒழிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டனர்.

இதில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது,

தரமான கல்வியையும், வேலைவாய்ப்பையும், ஊழலற்ற, வெளிப்படையான ஆட்சி வழங்க வேண்டிய தமிழக அரசு மதுவிற்பனை செய்து வருகிறது. தமிழகம் மதுவால் சீரழிந்து வருகிறது' என குற்றம் சாட்டினார். 

தொடர்ந்து மதுஒழிப்பை வலியுறுத்தி போராடி வருகிறது பாமக. வருகிற சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்தால் தங்களது முதல் கையெழுத்து மது விலக்கை அமுல் படுத்துவதாகத் தான் இருக்கும் என தெரிவித்துள்ளார். 

இந்தப் போராட்டத்தில் சுவாமி அக்னிவேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாநில தலைவர் ஜி.கே.மணி, துணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, துணைத் தலைவர் கே.என். சேகர் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: