Wednesday, September 23, 2015

எங்கு வேண்டுமானாலும் சொல்வேன்... ஜெயலலிதா நிர்வாகம் மிக மோசமான நிர்வாகம்.. ராமதாஸ்

எங்கு வேண்டுமானாலும் சொல்வேன்... ஜெயலலிதா நிர்வாகம் மிக மோசமான நிர்வாகம்.. ராமதாஸ்

சென்னை: ஜெயலலிதா அரசின் நிர்வாகம் நல்ல நிர்வாகம் அல்ல. மிக மோசமான நிர்வாகம். இதை எந்த மேடையில் வேண்டுமானாலும் வந்து சொல்ல நான் தயார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.சென்னை தி.நகர் பஸ் நிலையம் அருகில் பாமக சார்பில் வரைவு தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது.கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு தேர்தல் அறிக்கையை விளக்கிப் பேசினார். அவரது பேச்சிலிருந்து...

மோசமான நிர்வாகம் தமிழகத்தில் ஜெயலலிதா அளித்து வரும் நிர்வாகம் நல்ல நிர்வாகம் அல்ல. இதை எந்த மேடையில் வேண்டுமானாலும் பேச தயாராக இருக்கிறேன். அதிமுக சார்பில் யார் வேண்டுமானாலும் இது குறித்து என்னிடம் விவாதிக்கலாம். இதை சொன்னால் என் மீது அவதூறு வழக்கு தொடருவார்கள்.
தலையில்தான் அடித்திருப்பார்கள் இதைப் பார்த்து மாநாட்டிற்கு வந்தவர்கள் தலையில் தான் அடித்து கொண்டிருப்பார்கள். முதல்வர் கூறியபடி முதலீடா வரப்போகிறது? நிச்சயம் ஒரு முதலீடும் வராது.

விஷ்ணுப்பிரியா கொலை வழக்கு விஷ்ணு பிரியா கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். ஒவ்வொரு மணித்துளியும் பாமகவுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

நேர்மையான முதல்வரா நீங்கள்? நேர்மையான முதல்வராக இருந்தால் ஜெயலலிதா வரும் தேர்தலில் காசு கொடுக்க மாட்டேன் என்று அறிவிக்க தயாரா? தமிழ்நாடு தற்போது ஐசியூவில் இருக்கிறது.
அமைச்சர்களே முதல்வரைப் பார்க்க முடியவில்லை அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக ஊழல் மாறி விட்டது. அமைச்சர்களே கூட முதல்வரை பார்க்க முடியாது என்ற நிலை தான் உள்ளது.

வீடியோவில் மட்டுமே முதல்வரைப் பார்க்க முடிகிறது தனி மனிதருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றினார்கள். காணொலி காட்சி மூலம் மட்டுமே முதல்வர் அனைத்து திட்டங்களையும் திறந்து வைக்கிறார். தற்போதைய ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது. மொத்தத்தில் சுனாமி ஊழல் கட்சியாக அதிமுக தற்போது விளங்கி வருகிறது என்று காட்டமாக பேசினார் டாக்டர் ராமதாஸ்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: