Sunday, September 6, 2015

அன்புமணி தலைமையில் நாளை 5000 பெண்கள் பங்கேற்கும் மதுஒழிப்பு போராட்டம்

சென்னை: பாமக முதல்வர் வேட்பாளரும், அக்கட்சியின் இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் தலைமையில் நாளை சென்னையில் சுமார் 5000 பெண்கள் பங்கேற்கும் மதுஒழிப்பு போராட்டம் நடைபெற உள்ளது.தொடர்ந்து மதுஒழிப்பை வலியுறுத்தி போராடி வருகிறது பாமக. வருகிற சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்தால் தங்களது முதல் கையெழுத்து மது விலக்கை அமுல் படுத்துவதாகத் தான் இருக்கும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
இதன் அடுத்த கட்டமாக பாமக மகளிர் அணி சார்பில் நாளை சென்னை சேப்பாக்கத்தில் மது ஒழிப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பெண்கள் கலந்து கொள்கிறார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்குகிறார். சுவாமி அக்னிவேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மாநில தலைவர் ஜி.கே.மணி, துணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, துணைத் தலைவர் கே.என். சேகர் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.இது தொடர்பாக ஏ.கே.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசியல், மொழி, மதம் அனைத்துக்கும் அப்பாற்பட்டு மக்களை சிதைத்து வருவது மது. எனவே மதுவை ஒழிக்க அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பு மக்களும் அணிதிரண்டு வந்து ஆதரவு தரவேண்டும். மது ஒழிக்கப்படும்வரை பா.ம.க. போராடும்' எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: