Sunday, September 20, 2015

நாங்கள் விளம்பரத்துக்காக செய்யவில்லை: காப்பியடிக்கவில்லை: சுயமாக வடிவமைத்தது: ராமதாஸ்



பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய மண்டல அரசியல் மாநாடு திருச்சி, பஞ்சப்பூரில் 20.09.2015 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,

பாமகவைச் சேர்ந்த முன்னாள் மந்திரி வேலுவுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தேன். அவர் மட்டுமல்ல எம்பியா இருந்தவர்களுக்கு எல்லாம் ஒரு வேண்டுகோள் வைத்தேன். ஒரு நாள் இரவு ஒரு கிராமத்திற்கு சென்று தங்கி, சாப்பிட்டு, அங்கேயே படுத்திருக்க வேண்டும் என்று சொன்னேன். இதுவரை எந்தக் கட்சியாவது இதுபோன்று செய்திருக்கிறார்களா. வேலு ஒரு கிராமத்திற்கு சென்று இந்த ஊரில் கதவு இல்லாத, மின்சார வசதி இல்லாத வீடு இருக்கிறதா என்று கேட்டார். இருக்கிறது என்றதும், அந்த வீட்டிற்கு சென்றார். அந்த வீட்டில் கட்டில் கூட கிடையாது. மந்திரி வந்திருக்கிறார் என்று வேறொரு வீட்டில் இருந்து கட்டில் கொண்டு வந்து போட்டார்கள். அங்கேயே தங்கினார். என்ன வேலு சாப்பிட்டீங்க என்றேன். ஏதோ ஒரு கஞ்சு கொடுத்தாங்க, குடிச்சேன் என்றார். அது ஒரு அருந்ததியர் வீடு. இதை நாங்கள் விளம்பரப்படுத்தவில்லை. பத்திரிகைகளும் அப்போது இல்லை. கேமரா, பத்திரிகைகளை அழைத்துப்போய் இதுபோன்று செய்கிற பழக்கம் இல்லை. 

15 வருடங்களுக்கு முன்பு நான் ஈரோடு சென்றிருந்தேன். அப்போது சாப்பாட்டு நேரம் வந்தவுடன் சாப்பாடு வருகிறது என்றனர். நான் கேட்டேன். நம்ம கட்சியின் ஏழ்மையான தொண்டர். குடிசையில் இருக்கிற தொண்டர் வீடு எங்கே இருக்கிறது என்று கேட்டு, அங்கு சென்றோம். குடிசைக்குள் குனிந்துதான் செல்ல வேண்டும். என்ன இருக்கு என்றோம். பழைய கஞ்சி இருக்கிறது என்றதும், அதை வாங்கி சாப்பிட்டோம். இதையெல்லாம் நாங்க என்ன விளம்பரத்துக்காகவா செய்தோம். நம்ம தொண்டர்களின் வாழ்நிலை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதற்காக செய்வது இதுதெல்லாம். 

அப்ப செய்ததை இப்ப நான் செய்தால் மற்றக் கட்சிக்காரர்கள் காப்பியடிப்பார்கள். காப்பியடிக்கிறார்களே அதனை மறைமுகமா அடிச்சா பரவாயில்லை. ஈயடிச்சான் காப்பியடிக்கிறார்கள். தேர்தல் அறிக்கையை காப்பியடிக்கிறார்கள். அதனை காப்பியடிச்சாலும் ஒன்றும் நடக்காது. நாங்கள் எல்லாவற்றையும் சொல்லிவிட்டோம். A to Z. ஒரு குழந்தை தாயின் அரவணைப்பில் இருந்து அதனுடைய கல்வியின் முழு செலவினையும் ஏற்று, அதன் பிறகு 88, 90 வயது ஆகும் வரை பாதுகாக்க தேவையான பட்ஜெட்டை போட்டுவிட்டோம். நாங்கள் சொல்லாத விசயம் என்ன இருக்கு. பொருளாதாரம், தொழில், நல்ல ஆட்சி, வேளாண்மை, கல்வி, தரமான சுகாதாரம் என எதையும் விடவில்லை. ஏதோ 4 வரி அல்ல. ஒவ்வொன்றிலும் 15 பாயிண்ட் என பாமக திட்டங்களை சொல்லியிருக்கிறோம். இதனை நாங்கள் காப்பியடிக்கவில்லை. சுயமாக நாங்கள் வடிவமைத்தது. இவ்வாறு பேசினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: