Tuesday, September 29, 2015

ஒரு பைசா ஊழல் இல்லாத தமிழகம் படைப்போம்... பாமகவின் அடுத்த பிரசார வாசகம்!

சென்னை: பாமக தனது 3வது பிரசார வாசகத்தை மக்கள் முன் வைத்துள்ளது. 50 ஆண்டு ஊழலுக்கு முடிவு கட்டுவோம். ஒரு பைசா ஊழல் இல்லா தமிழகம் படைப்போம் என்பதே அந்த மூன்றாவது வாசகம்.டாக்டர் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக அறிவித்த கையோடு சட்டசபைத் தேர்தலுக்குத் தயாராகி விட்டது பாமக. ஊர் தோறும் மாநாடுகள், கூட்டங்கள் என டாக்டர் அன்புமணியும், டாக்டர் ராமதாஸும் தீவிரப் பணியாற்றி வருகின்றனர்.மேலும் மக்களிடம் ரீச் ஆகும் வகையில் புதுப் புது பிரசார வாசகங்களையும் அவர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
 
50 ஆண்டு ஊழலுக்கு முடிவு கட்டுவோம் இப்போது வெளியாகியுள்ள 3வது ஸ்லோகன் இது. 50 ஆண்டு ஊழலுக்கு முடிவு கட்டுவோம். ஒரு பைசா ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று இந்த வாசகம் கூறுகிறது.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: