Saturday, September 12, 2015

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பா.ம.க. தனித்துப் போட்டி: டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

மதுரை: தமிழகத்தில் 2016ல் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பா.ம.க. தனித்துப் போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் பா.ம.க. எங்கள் அணிக்கு வரும் என, பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் கூறி இருப்பது நிறைவேறாத ஒன்றாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் கூறியதாவது:விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த நிலம் கையகப்படுத்தும் சட்டம் கைவிடப்படும் என பிரதமர் அறிவித்தார். இதனால் விளை நிலத்திற்கான ஆபத்து விலகிவிட்ட நிலையில் அதைவிட பெரிய ஆபத்து ஏற்பட்டு உள்ளது.மத்திய திட்ட நிதி ஆணைய துணை தலைவர் கூறும்போது, தேசிய அளவில் நிலம் கையகப்படுத்தும் திட்டம் கைவிடப்பட்டு விட்டதால் மாநிலங்கள் தங்கள் இஷ்டம்போல் தனித்தனியே நிலம் கையப்படுத்தும் திட்டத்தை நிறை வேற்றிக் கொள்ளலாம் என அறிவித்திருக்கிறார்.தமிழக அரசு சில திட்டங்களுக்காக நிலங்களை கையகப்படுத்தி உள்ளது. இது சிறப்பாக இருப்பதாகவும், அதைபோல மற்ற மாநிலங்களும் இதனை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கூறி கூறி இருக்கும் கருத்து மிகவும் ஆபத்தானதாகும்
 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: