Thursday, September 3, 2015

அதிமுக ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்: 2016ல் பாமக ஆட்சி: அன்புமணி ராமதாஸ் பேட்டி

அதிமுக ஆட்சி மீது மக்கள் கடும் கோபம் கொண்டுள்ளனர் என்று பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னையில் பாமக சார்பில் புதிய செல்போன் செயலி வெளியீடு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, 

புதிய செயலி மூலம் பாமக கொள்கைகள், லட்சியங்கள் மக்களிடம் கொண்டு செல்லப்படும். பாமக நடத்தும் கருப்புக் கணிப்பு விவரமும் செயலி மூலம் எடுத்துச் செல்லப்படும். சமூக ஊடகங்களை பயன்படுத்தி அரசியல் தலைவர்கள் பலர் வெற்றி பெற்றுள்ளனர். பாமகவும் சமூக ஊடகங்களை திறமையாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. 

அதிமுக ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. நிர்வாகம் செயலற்று கிடக்கிறது. அதிமுக ஆட்சி மீது மக்கள் கடும் கோபம் கொண்டுள்ளனர். நிர்வாகம் ஸ்தம்பித்திருக்கிறது. ஆட்சி மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். தேர்தலுக்காக சில அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கிறது. 

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அரசு நிர்வாகத்தில் 4 லட்சத்து 15 ஆயிரம் கோடி கடன் உள்ளது. நிர்வாக கடன் என்று பார்த்தால் 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி. கடன் வாங்கி என்ன செய்தார்கள். மக்கள் மாற்றத்திற்கான முடிவை எடுக்க உள்ளனர். மதுவுக்கு எதிரான போராட்டத்தில் பாமக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. வரும் 7ஆம் தேதி சென்னையில் மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும். 2016ம் ஆண்டில் பாமக ஆட்சி அமைக்கும் என்று நம்புகிறேன் என்றார்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: