Wednesday, June 27, 2012

ரணவக்கவும் ராஜபக்சேவும் மன்னிப்பு கேட்க வேண்டும் : ராமதாஸ்



இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
’’ஈழத் தமிழர்களின் நலனுக்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியாத இலங்கை மின்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க, இலங்கையில் தமிழீழம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
 இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித் துள்ளார்.
 தமிழீழத்துக்காக இந்தியா குரல் கொடுத்தால் இலங்கையில் பேரழிவுதான் ஏற்படும். தமிழீழம் அமைக்க தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் முயற்சிக்கக் கூடாது. அவர்களின் விருப்பங்கள் நிறைவேறாது எனக் கூறியுள்ளார்.

இலங்கை அமைச்சரின் இந்த பேச்சு  தமிழர்களின் தன்மானத்துக்கு விடப்பட்ட சவால். இதை தமிழக தலைவர்கள் ஒன்று சேர்ந்து கண்டிக்க வேண்டும்.
இந்தியா கண்டனம் தெரிவிக்காததால்தான் தமிழக தலைவர்களை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற துணிச்சல் சிங்களர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதை இனியும் அனுமதிக்கக்கூடாது. சம்பிக்க ரணவக்கவும் அவரது அரசியல் குருவான ராஜபட்சவும் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

தமிழக தலைவர்களை விமர்சித்தால் மோசமான விளைவு ஏற்படும் என்று கொழும்பு செல்லும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் மூலம் இந்திய அரசு எச்சரிக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: