Sunday, June 24, 2012

தமிழகத்தில் 2016ம் ஆண்டு பா.ம.க. ஆட்சியில் அமரும் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே. பேட்டையில் திருத்தணி தொகுதி பா.ம.க. இளைஞர்கள், இளம்பெண்கள் பயிற்சி கூட்டம் நடைப்பெற்றது. இதில், கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 40 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இங்கு வன்னியர்கள் அதிக அளவில் வசித்தபோதும் வன்னிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல் அமைச்சராக வந்தது இல்லை. 2016ல் பா.ம.க. ஆட்சியை பிடிக்கும். அப்போது மதுவிலக்கு பைலில் முதல் கையெழுத்து போடப்படும்.

பா.ம.க.வினர் இனி கிராமங்கள் தோறும் சென்று அங்கு உள்ள மக்களிடம் கலந்து பேசி அவர்களை பா.ம.க.விற்கு வாக்களிக்கும் படி செய்ய வேண்டும். கிராமங்களில் இரவு தங்கி அந்த மக்களோடு உணவு அருந்தி அவர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: