Sunday, June 10, 2012

இந்தி தேசிய மொழி என்பதா?: தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த கல்வி ஆண்டில் பெரும் பிரளயத்தையே ஏற்படுத்திய சமச்சீர் கல்வி சர்ச்சையின் புயல் இந்த ஆண்டும் கூட ஓயாது போல் இருக்கிறது. சமச்சீர் பாடங்களில் இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று இடம்பெற்றிருக்கிறது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம்சாட்ட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சமச்சீர் கல்வி திட்டத்தின்படி வெளியிடப்பட்டுள்ள 10-ம் வகுப்பு சமூக அறிவியல், 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடங்களில் இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய வரலாற்றுப் பிழையாகும்.
இந்த பாடத்தை படிக்கும் மாணவர்கள் இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று தவறாக புரிந்துக் கொள்ளும் ஆபத்து உள்ளது. தி.மு.க. ஆட்சியில் தயாரிக்கப்பட்ட பாடநூல்களில் பார்த்து பார்த்து திருத்தம் செய்து பல்வேறு பகுதிகளை கடந்த ஆண்டு நீக்கிய அ.தி.மு.க. அரசும் இந்த மிகப்பெரிய வரலாற்று பிழையை கண்டு கெள்ளவோ, திருத்தவோ இல்லை.
இந்தி மொழியை விரட்டியடித்து விட்டதாக மார்த்தட்டிகொள்ளும் திராவிட கட்சிகளின் தமிழ் துரோகமும், இந்தி பாசமும் இதன்மூலம் அம்பலப்பட்டுவிட்டன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: