Monday, June 4, 2012

பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க வேண்டும்: ராமதாஸ்

சுற்றுச்சூழலைக் காக்க பிளாஸ்டிக் பைகள் எனப்படும் நெகிழிப்பைகளை ஒழிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
பிளாஸ்டிக்  பை ஒன்றின் ஆயுள்காலம் 12 நிமிடங்கள்தான் என்றபோதிலும் அந்த பை அழிவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இந்த பைகளை உட்கொண்டு ஆண்டுக்கு ஒரு லட்சம் திமிங்கலங்களும், சீல் போன்ற கடல்வாழ் உயிரினங்களும், 10 லட்சம் பறவைகளும் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு சாலை அமைக்கலாம் என்ற கருத்து தவறானது. சாலை அமைப்பதற்காக மிகக்குறைந்த அளவிலேயே பிளாஸ்டிக் குப்பைகளை பயன்படுத்தமுடியும். இதற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கும் பல தலைமுறைக்கு அழியாமல் இருந்து சுற்றுச்சூழலை கெடுக்கும்.

மனித குலத்துக்கு பெரும் கேட்டை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண முழுமையான பிளாஸ்டிக் குப்பை ஒழிப்பு முறையை தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். 40 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகளை தடை செய்தும், கடைகளில் இலவசமாக பிளாஸ்டிக் பைகளை வழங்கக்கூடாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவு தமிழகத்தில் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.
எனவே இனியும் தாமதிக்காமல் தமிழக அரசும், மாநகராட்சிகளும், நகராட்சிகளும் இந்த சட்டவிதிகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: