Sunday, June 24, 2012

சென்னையில் ராமதாஸ் தலைமையில் நாளை பாமக மாநில செயற்குழு கூட்டம்


சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைமை செயற்குழு கூட்டம் நாளை(26ம் தேதி) சென்னை வியாசர்பாடியில் நடைபெற உள்ளது என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைமை செயற்குழு கூட்டம் சென்னை பெரம்பூர் வியாசர்பாடி அம்பேத்கார் கலைக்கல்லூரி அருகில் உள்ள ஜானகி மஹால் அரங்கில் ஜூன் 26ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்குகிறார். பாமக தலைவர் ஜி.கே. மணி முன்னிலை வகிக்கிறார். பாமக இளைஞரணித் தலைவரும், முன்னாள் நடுவண் நலவாழ்வுத்துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் சிறப்புரை ஆற்றுகிறார்.
முக்கியத்துவம் வாய்ந்த செயற்குழு கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், துணை அமைப்புகளின் நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சி குறித்தும், பிற முக்கிய பிரச்சனைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் உறவினர் முருகானந்தம் கொலை வழக்கில் கடந்த சில நாட்களாக அதிவேகம் காட்டி வரும் சிபிஐ, பாமக முன்னாள் எம்.பி. தன்ராஜ் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகளை கைது செய்தது. இதனால் இந்த கூட்டத்தில் (திமுக பாணியில்- கனிமொழி கைது விவகாரம்) சிபிஐக்கு கண்டனம் தெரிவிக்கப்படலாம் என கூறப்படுகின்றது. இதனால் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: