Saturday, June 16, 2012

தமிழ்நாட்டை ஆண்டவர்கள் குடியுங்கள் என்கின்றனர்! நாங்கள் படியுங்கள் என்கிறோம்! ராமதாஸ் பேச்சு!

செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி பா.ம.க. செயல் வீரர்கள் கூட்டம் மறைமலை நகரில் உள்ள பாலாஜி திருமண மண்டபத்தில் நடந்தது. மாநில துணை பொது செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட டாக்டர் ராமதாஸ் பேசியதாவது: 
தமிழ்நாட்டில் உள்ள 2 பெரிய கட்சிகளும், ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களை ஓட்டுப்போடவும், கொடி பிடிக்கவும் பயன்படுத்தி வருகிறார்கள். இளைஞர்களுக்கு நல்வழி காட்டக் கூடிய கட்சி பா.ம.க. மட்டும் தான்.
மற்ற கட்சிகள் குடி, புகை பிடிக்க எந்த தடையும் விதிக்கவில்லை. இரண்டு திராவிடக்கட்சிகளும் நாளுக்கு நாள் அதிக குடிமகன்களை உருவாக்கி 25 கோடி வருவாயை அதிக மாக்கி இளைஞர்களை குடிக்க வழிக்காட்டி வருகிறது. நாம் மட்டும்தான் இளைஞர்கள் குடிக்க வேண்டாம் என்று கூறி குழந்தைகளை படிக்க சொல்கிறது.
தமிழ்நாட்டை ஆண்டவர்கள் குடியுங்கள் என்கின்றனர். நாங்கள் படியுங்கள் என்று சொல்லி வருகிறோம். பொது இடத்தில் புகை பிடிக்கக்கூடாது என்று மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் வாதாடி சட்டத்தை கொண்டு வந்தார். இளைஞர்கள்தான் இந்த நாட்டின் சொத்துக்கள், திரைப்படம், புகை, கிரிக்கெட் போன்றவைகளால் இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். இதை அகற்ற வேண்டும். புதிய அரசியல், புதிய நம்பிக்கைகளை விதைத்து இளைஞர்களிடம் மாற்றம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: