Tuesday, June 5, 2012

ராமதாஸ் வழங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்

ராமதாஸ் வழங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்

பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசாரம் பாண்டி பஜாரில் இன்று நடந்தது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரசாரத்தை தொடங்கி வைத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கடை கடையாக விநியோகம் செய்தார்.

பின்னர் ராமதாஸ் செய்தியாளர்களிடம்,   ‘’பிளாஸ்டிக் கழிவுகள் மனித உயிர்களுக்கு கேடு விளை விப்பவை. பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி சாலை போடலாம் என்கிறார்கள்.
அனைத்து வகை பிளாஸ்டிக் கழிவுகளையும் சாலைபோட பயன்படுத்த முடியாது. அவ்வாறு போடப் படும் சாலைகளும் நூற்றாண்டுகளுக்கும் அழியாது. ஏதோ ஒரு வகையில் அதுவும் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

40 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக்குகளை முற்றிலுமாக பயன்படுத்தகூடாது என்று மத்திய அரசு தடை விதித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஒரு இடத்தில்கூட அதை அமுல்படுத் தவில்லை. பொதுமக்களும் கடைகளில் பொருட்கள் வாங்க துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக்குகள் பயன்படுத்த அரசு தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: