Friday, June 8, 2012

டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு பூட்டு -அரக்கோணத்தில் ராமதாஸ்



பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வன்னியர் பட்டதாரி இளைஞர்கள் கலந்தாய்வு கூட்டம் அரக்கோணத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

 பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்,   ‘’2016-ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை நோக்கி பா.ம.க. வன்னியர் இளம் பட்டதாரிகள் சங்கம் அமைத்து அதன் மூலம் ஒவ்வொரு கிராமமாக 50 இளம் பட்டதாரிகளை கட்சியில் சேர்க்க வேண்டும்.

தமிழகத்தில் பா.ம.க. ஆட்சியை பிடிக்கும்போது விஞ்ஞானம் சம்பந்தமான கல்வி, வணிக மேலாண்மை கல்வி சாதா ரண ஏழை மக்களுக்கு கிடைக்கும் வகையில் கல்வியில் பெரும் புரட்சி ஏற்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் ஆளும் கட்சியும், ஏற்கனவே ஆண்ட கட்சியும் மக்களை ஏமாற்றுவதற்காக இலவசங் களை கொடுத்து பிச்சைக்காரர்களாக மாற்றி வருகிறார்கள். இந்த நிலைமை மாறவேண்டும்.

அடுத்த மாதம் (ஜூலை) 11-ந் தேதி டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு பூட்டு போட்டு மூடும் போராட்டம் நடத்த உள்ளோம். செப்டம்பர் மாதம் 17-ந் தேதி வன்னியர் களுக்கு தனிஇட ஒதுக்கீட்டை வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ளோம்’’ என்று கூறினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: