Sunday, June 24, 2012

பாமக ஜூலை 9-ல் போராட்டம் : ராமதாஸ் அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக வேளாண் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு முடிவுசெய்திருப்பதைக் கண்டித்து பாமக சார்பில் ஜூலை 9-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஏழை விவசாயிகளின் உணர்வுகளை மதித்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் அரக்கோணம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டைக்காக நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.
இல்லாவிட்டால் அரக்கோணத்தை அடுத்த சாலை என்ற இடத்தில் ஜூலை 9-ம் தேதி விவசாயி களை திரட்டி தொடர் முழக்க போராட்டம் நடத்தப்படும். இப்போராட்டத்துக்கு நானே தலைமை ஏற்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: