Thursday, June 21, 2012

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 500 லிட்டர் இலவச டீசல் வழங்க வேண்டும் :ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று கரூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பு அடிப்படையில் தண்ணீர் திறந்து  விட கர்நாடக அரசு மறுத்து விட்டது. தென்  மேற்கு பருவ மழை பொய்த்து விட்டது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து ஜுன் மாதம் 12-ந்தேதி திறக்கப்பட வேண்டிய தண்ணீர் திறக்கப்படவில்லை.
காவிரியை நம்பி உள்ள 13 மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கர்நாடக அரசை வலியுறுத்தி இடர்பாடு நீர் பகிர்வு பெற தமிழக அரசும் தவறி விட்டது.

காவிரி பாசன விவசாயிகளின் நலனை  கருத்தில் கொண்டு 12 மணி நேரம் இலவச மும்முனை மின்சாரம்  வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இது வரவேற்கதக்க ஒன்றுதான்.  
இருந்தாலும் காவிரி பாசன விவசாயிகளில் 3-ல் 1 பங்குக்கு குறைவான   விவசாயிகள்தான் இந்த இலவச மின்சாரத்தை பெறுவார்கள். மீதமுள்ள  விவசாயிகள் டீசல் என்ஜின் மோட்டார்களை பயன்படுத்திதான் விவசாயம்  செய்ய வேண்டிய நிலை உள்ளது.
டீசலை பயன்படுத்தும் போது விவசாயிகளுக்கு அதிகம் செலவாகும்.   எனவே அவர்கள் விவசாயம் செய்ய போவதில்லை என தெரிவித்துள்ளனர். எனவே குறுவை சாகுபடி பெற டீசல் என்ஜின் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 500 லிட்டர் டீசலை அரசு இலவசமாக வழங்க வேண்டும். இதனால் அரசுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படாது.
கடந்த  ஆட்சியில் கடுமையான மின்வெட்டு ஏற்பட்ட போது   தொழிற்சாலைகளில் பயன்படுத்திய ஜெனரேட்டர்களுக்கு டீசல் மானியம் வழங்கப்பட்டது.

கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்கும் தொழிற்சாலைகளுக்கு மானியம் வழங்கப்பட்ட நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு டீசல் வழங்கவேண்டும். நெல்  கொள்முதல் விலையை மத்திய அரசு உயர்த்தி இருப்பது மிக,மிக குறைவு.
குவிண்டால் ஒன்றுக்கு  ரூ.1750  உயர்த்த வேண்டும். இதில் தமிழக அரசு ஊக்கத்தொகை ரூ.250-ம் வழங்க வேண்டும்.

இடைத்தேர்தலை பொறுத்தவரை ஆளுங் கட்சி வேட்பாளர் விலை கொடுத்துதான் வெற்றி பெறுகிறார். இதனை கருத்தில் கொண்டுதான் பா.ம.க. இடைத்தேர்தல்களை புறக்கணிக்கிறது’’என்று கூறினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: