Tuesday, February 21, 2012

மின்வெட்டை சரிசெய்யாமல் மக்களை திசைதிருப்புகின்றனர்: ராமதாஸ்

மின்வெட்டை கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாமக சார்பில் இன்று (20.02.2012) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மின்வெட்டைக் கண்டித்து திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்தின்போது அவர் பேசுகையில்,

மின்வெட்டால் தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்து 3 மாதத்தில் மின்வெட்டை சரிசெய்வோம் என்று அதிமுக கூறியது. ஆனால் 8 மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை.



மின்வெட்டு நேரம் 8 மணி நேரம், 10 மணி நேரம் என அதிகரித்துள்ளது. மின்வெட்டை சரிசெய்யாமல் தம்முடன் இருந்தவர்களை கைது செய்து மக்களை திசைதிருப்புகின்றனர். எங்களிடம் மின்வெட்டை சரிசெய்ய பல்வேறு ஆலோசனைகள் உள்ளன. ஆனால் நாம் கூறினால் யாரும் ஏற்றுக்கொள்வதில்லை எனக் குறிப்பிட்டார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: