Monday, February 27, 2012

தனித்து போட்டியிடும் முடிவை எடுத்தது ஏன்? : ராமதாஸ்

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பா.ம.க. செயல்வீரர்கள் கூட்டம் மதுராந்தகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியபோது,

’’2016-ல் பா.ம.க. ஆட்சி அமைய புதிய செயல் திட்டமான மாற்றுக் கட்சியில் இருக்கும் வன்னியர்களை பா.ம.க-வில் சேர்க்க வேண்டும். தி.மு.க,அ.தி.மு.க. ஆகிய 2 திராவிட கட்சிகளுக்கு அடுத்து பலம் கொண்ட கட்சியாக பா.ம.க. உள்ளது.

1980-ம் ஆண்டு வன்னியர் சங்கம் 2 கொள்கைகளுக்காகத் தொடங்கப்பட்டது. ஒன்று வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு, மற்றொன்று வன்னியர் நாட்டை ஆள வேண்டும். இதில் இட ஒதுக்கீட்டை போராடி பெற்றோம்’’ என்று தெரிவித்தார்.

அவர் மேலும், ‘’தி.மு.க,அ.தி.மு.க. உடன் கூட்டணி வைத்து கொள்கையை விட்டு விட்டோம். பா.ம.க-வை ஒழிப்பதில் தி.மு.க, அ.தி.மு.க-விற்கும் கூட்டணி.

இதனை கடந்த எம்.பி. தேர்தல்,சட்டப்பேரவைத் தேர்தலில் கண்டோம். எனவே கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27-ம் தேதி நடைபெற்ற பொதுக் குழுவில் பா.ம.க. தனித்துப் போட்டியிடுவது என்று முடிவடுத்தோம்’’ என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: