Saturday, February 18, 2012

இது கடுமையாக கண்டிக்கத்தக்கது;இதனை ரத்து செய்ய வேண்டும் : ராமதாஸ்

’’மனித உயிர்களுக்கும், தேசிய பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக திகழும் பயங்கரவாதத்தை வேரோடு ஒழிக்கவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் இதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் கூட்டாட்சி தத்துவத்திற்கு வேட்டுவைக்கும் வகையில் இருக்கக்கூடாது.



தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் ஏற்படுத்தப்படும் என்றும், மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள ஆணையின்படி, பயங்கரவாத தடுப்பு மையத்தை நிர்வகிக்கும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள், யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத செயல்கள் தடுப்புச்சட்டத்தின் கீழ், ஒருவரை கைது செய்வதற்காக மாநில உள்துறை செயலாளருக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரம் இந்த ஆணையின் மூலம் பறிக்கப்பட்டு மத்திய உளவுத்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.


இது இந்திய அரசியல் சட்டத்தின்படி, மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பறிக்கும் வகையில் உள்ளது.







இப்படியொரு சட்டத்தை பிறப்பித்திருப்பதன் மூலம், கூட்டாட்சி தத்துவத்தின் மீது பயங்கரவாத தாக்குதலை விட, மிகப்பெரிய தாக்குதலை மத்திய அரசு நடத்தியுள்ளது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதனை ரத்து செய்ய வேண்டும்.



கல்வி, நிதி என பொதுப்பட்டியலில் உள்ள அனைத் துத்துறைகளிலும் மத்திய அரசு விருப்பம்போல திருத்தங்களை கொண்டு வந்து மாநில அரசுகளின் உரிமைகளை பறித்து வருகிறது.

இதன் மூலம் மாநிலங்களை அலங்கரிக்கப்பட்ட மாநகராட்சிகளாக குறைப்பதையும் தாண்டி, தாம் இட்ட கட்டளையை நிறைவேற்றும் அடிமைகளாகவும், எந்தவொரு தேவைக்கும் தங்களிடம் வந்து கையேந்தி நிற்பவர்களாகவும் சிறுமைப்படுத்த மத்திய அரசு முயல்வதாகவே கருத வேண்டி யிருக்கிறது’’ என்று கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: