Thursday, December 6, 2012

டாக்டர் ராமதாஸ் நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு: அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக் அறிவிப்பு

அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவனர் தலைவர் பி.டி.அரசகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் சென்னையில் நடந்த அனைத்து சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் கூட்டத்தில், வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும் என வலியுறுத்தி அடுத்த (ஜனவரி) மாதம் 4-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எங்கள் கட்சி முழு ஆதரவு அளிப்பது என, கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு பி.டி.அரசகுமார் கூறி உள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: