Thursday, December 6, 2012

மாயாவதி போன்ற ஒருமித்த கருத்துடையவர்களுடன் கூட்டணி: ஜி.கே.மணி

திண்டுக்கல் மாவட்ட பா.ம.க பொதுக்குழு கூட்டம் 06.11.2012 வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்துகொள்ளவந்த கட்சியின் மாநிலத்தலைவர் ஜி.கே.மணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி போன்ற ஒருமித்த கருத்துடைய சமூக சிந்தனை கொண்டவர்களுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். தமிழகத்தில் திராவிட கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: