Sunday, December 16, 2012

இன்று பாமகவின் பூட்டு போராட்டம்... விடிய விடிய கடைகளிலேயே தங்க வைக்கப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள்

சென்னை: பாமகவின் டாஸ்மாக் கடைகளுக்குப் பூட்டுப் போடும் போராட்டம் இன்று நடப்பதையொட்டி தமிழகம் முழுவதும் மதுக் கடைகளுக்குப் போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கையாக பல பாமகவினரை நேற்றே போலீஸார் கைது செய்தனர். மேலும், கடை ஊழியர்களையும் நேற்று இரவே கடைகளில் தங்க வைத்தனர் போலீஸார்.
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மது கடைகளுக்கு இன்று பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள 6 ஆயிரத்து 823 மதுக்கடைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரவு ரோந்து போலீசாரையும் டாஸ்மாக் கடை பகுதியில் ரோந்து செல்லும்படி உயர் போலீஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கையாக நேற்று இரவு கடை வர்த்தகம் முடிந்ததும் கடைகளிலேயே ஊழியர்களைத் தங்க வைத்தனர் போலீஸார். இதற்கு ஊழியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். இரவில் வந்து பாமகவினரோ அல்லது சமூக விரோதிகளோ தாக்குதல் நடத்தினால் யார் பொறுப்பு ஏற்பது என்று அவர்கள் புலம்பினர்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: