Saturday, December 15, 2012

திட்டமிட்டப்படி மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம்: கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும்: ராமதாஸ்

முன்னெச்சரிக்கை என்ற பெயரில் பாமகவினரை கைது செய்தாலும், மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

மதுவிலக்கை அமல்படுத்தக்கோரும் தங்களது போராட்டத்தை முடக்க வேண்டும் என்பதற்காகவே முன்னெச்சரிக்கை என்ற பெயரில் பாமகவினர் கைது செய்யப்படுவதாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தால் போக்குவரத்திற்கோ அல்லது பொது அமைதிக்கோ பாதிப்பு ஏற்படாது. இரவு நேரத்தில் மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடப்போவதாக காவல்துறை தவறான தகவல்களை பரப்பி முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது. கைது செய்யப்பட்ட பாமகவினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சாமல் திட்டமிட்டப்படி மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் 17.12.2012 அன்று காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் நடைபெறும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: