Friday, December 7, 2012

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டி : பா.ம.க

புதுச்சேரி: புதுச்சேரி மாநில உள்ளாட்சித் தேர்தலில் பாமக புதிய கூட்டணியை உருவாக்கிப் போட்டியிடும் என்று அம்மாநில செயலாளர் அனந்தராமன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் வரும் ஜனவரி 4,8,10 ஆகிய நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலுக்கான அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக களத்தில் இறங்கியுள்ளன.
பாமக
புதுவை உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வியாழக்கிழமையன்று பெறப்பட்டன. அப்போது அனந்தராமன் வெளியிட்ட அறிக்கையில், பாமக கூட்டணி அமைத்து போட்டியிடும். யாருடன் கூட்டணி என்பதை கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஜாதிய கூட்டணி என்று பேசிவரும் பாமக, புதுச்சேரியில் எப்படிப்பட்ட கூட்டணியை அமைக்கும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது
அதிமுக
இதனிடையே புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் பொறுப்பாளர்கள் பெயரை அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டிருக்கிறார்.
அவரது அறிக்கையில், அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக புதுச்சேரி மாநிலத்திற்கு (காரைக்கால் நீங்கலாக) எம்.சி.சம்பத் ,(கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர், சுற்றுச் சூழல் துறை அமைச்சர்) நா.பாலகங்கா, எம்.பி., (வட சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்) காரைக்கால் மாவட்டத்துக்கு, ஆர்.காமராஜ் (திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர், உணவுத்துறை அமைச்சர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியிட விரும்புவோர் விண்ணப்பப் படிவங்களைப் பெறுவதற்கான இடங்களையும் அதிமுக அறிவித்திருக்கிறது. புதுச்சேரி மாநிலம் (காரைக்கால் நீங்கலாக) - உப்பளம் தொகுதியில் உள்ள புதுச்சேரி மாநிலக் கழக அலுவலகம், காரைக்கால் மாவட்டம்-9, பாரதியார் ரோடு, கோட்டுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் விண்ணப்பப் படிவங்களைப் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. விண்ணப்பங்களைப் பெறுவோர் கட்டணமாக, நகரசபை தலைவர் -ரூ.10 ஆயிரம், நகரசபை உறுப்பினர் (கவுன்சிலர்) -ரூ.2 ஆயிரம், கொம்யூன் பஞ்சாயத்து மன்ற உறுப்பினர் -ரூ.1000 கட்டணமாகும் என்றும் அறிவிக்கபப்ட்டிருக்கிறது. நாளையும் நாளை மறுநாளும் இந்த விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட இருக்கின்றன.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: