Monday, December 31, 2012

பூரண மதுவிலக்கை அமல்படுத்த பாமக பொதுக்குழுவில் தீர்மானம்

சென்னை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் இன்று நடைபெற்ற பாமகவின் பொதுக்குழுவில், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை தாமதமின்றி அரசிதழில் வெளியிட வேண்டும், காவிரி பாசன விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்; தமிழ் நாட்டில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் வால்மார்ட் நிறுவனம் நுழையாமல் தடுக்க வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதேபோல் மதுரை மாவட்டத்தில் நுழைய தடை விதிப்பது குறித்து பாமக நிறுவனர் ராமதாசுக்கு நோட்டீஸ் அனுப்பிய தமிழக அரசுக்கு பொதுக் குழுவில் கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: