Saturday, February 9, 2013

பாமக ஆட்சி பீடத்தில் அமரும்போது மூன்று மட்டுமே இலவசமாக வழங்கப்படும்: அன்புமணி ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆடுதுறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வன்னிய இளம் பெண்களுக்கான பயிற்சிக் கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ்,

நாட்டில் மதுவையும், போதைப் பொருள்களையும் ஓழிக்க வேண்டும். இதுவே தற்போதைய முதன்மைப் பிரச்னையாகவும், வறுமைக்கு காரணமாகவும் உள்ளது. பாமகவைச் சேர்ந்தவர் முதல்வராக வந்தவுடன் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கிற்காகத் தான் இருக்கும். அரசு மதுக்கடைகள் அனைத்தும் பூட்டப்படும்.
கடந்த 46 ஆண்டுகளாக திராவிட கட்சியினர் ஆட்சிபுரிந்து மாநிலத்தை நாசமாக்கிவிட்டனர்.
நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது அமெரிக்காவில் செயல்படுத்தப்படும் 911 என்ற சேவையைப் பார்த்து, துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து நமது நாட்டில் கொண்டு வந்த திட்டம்தான் 108 ஆம்புலன்ஸ் சேவை. மற்ற மாநிலங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பாமக, வரும் 2016-ல் தமிழகத்தில் ஆட்சி பீடத்தில் அமரும். அப்போது கல்வி, தரமான மருத்துவ வசதியுடன் கூடிய சுகாதாரம், விவசாய இடுபொருட்கள் தடையின்றி கிடைக்கும். இவை மூன்று மட்டுமே இலவசமாக வழங்கப்படும். மற்றப்படி எந்த இலவசத்தையும் பாமக அளிக்காது என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: