Saturday, February 16, 2013

பாட்டாளி மக்கள் கட்சியின் வன்னியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு

பாட்டாளி மக்கள் கட்சியின் வன்னியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் 15.2.13-ந்தேதி நடைபெற்றது.

இதில் பேசிய வன்னியர் சங்கத்தின் மாநில தலைவர் குரு எம்.எல்.ஏ, நமது மருத்துவர் அய்யா தங்களது மாவட்டங்களுக்குள் வரக்கூடாது என பல மாவட்ட ஆட்சியர்களும் தடை போடுகிறார்கள். நாங்கள் தமிழகத்தில் சுதந்திரமாக வலம் வந்தவர்கள் எங்களுக்கே தடையா? நாங்கள் நினைத்தால் தமிழகத்தில் எந்த அரசியல் கட்சி தலைவரும் நிம்மதியாக நடமாட முடியாது. ஆட்சியாளர்கள் மட்டுமல்ல முதல்வரேக்கூட எங்கும் போக முடியாத அளவுக்கு தடை போடுவது எப்படி என்பது எங்களுக்கு தெரியும் என தன் அதிரடியாக பேசியுள்ளார்.

முன்னால் மத்தியமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது:

உத்தரபிரசேத்தில் தற்போதைய முதல்வர் அகிலேஷ்யாதவ் தேர்தலுக்கு முன் பத்து லட்சம் மக்கள் மத்தியில் பேசினார். இந்த கூட்டம் பற்றி செய்திதாள்களும், தொலைக்காட்சிகளும் அவர் தான் அடுத்த முதல்வர் என எழுதின. நாம் லட்சங்களில் அல்ல கோடிகளில் நாம் மக்களை திரட்டுகிறோம் ஆனால் அதை எந்த செய்திதாளும் எழுத மறுக்கின்றன. அவர்கள் எழுதாவிட்டால் என்ன அடுத்த ஆட்சியமைக்கப் போவது நாம் தான் என்றார்.

இறுதியில் பேசிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், வரும் ஏப்ரல் 25ந்தேதி வன்னியர் குடும்ப விழாவான சித்திரை பௌர்ணமி விழா மகாபலிபுரத்தில் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. கோடி வன்னியர்கள் திரள வேண்டும் இதற்காக நாம் உழைக்க வேண்டும். நம் பலத்தை மகாபலிபுரத்தில் காட்ட வேண்டும் என்றவர், காதலித்து ஏமாற்றுபவர்கள் பற்றி நான் பேசக்காரணம் வேலூர் மாவட்டத்தில் இருந்து அதிகமான புகார்கள் வந்தன. அதைக்கொண்டே பேச தொடங்கினேன். இப்போது இதற்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கும்மென எதிர்பார்க்கவில்லை. காதல் என்ற பெயரில் ஏமாற்றும் பிற சாதியினரை எதிர்த்து போராடுவோம் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: