Tuesday, February 26, 2013

மதுவிலக்கு கோரி தொடர் உண்ணாவிரதம்!





துவிலக்கு கோரி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சசிபெருமாள் கடந்த ஜனவரி 30ஆம் தேதி சென்னை மெரினா காந்தி சிலை அருகே தனது உண்ணாவிரத்தை ஆரம்பித்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

முதல் நான்கு நாள் தண்ணீர் கூட குடிக்காமல் இருந்த அவரிடம் போலீசார் வற்புறுத்தல் காரணமாக, தண்ணீர் மட்டும் குடித்து வந்தார். பின்னர் அவரது உடல்நிலையை கருதி, 19ஆம் தேதி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு வலுக்கட்டாயமாக குலுக்கோஸ் ஏற்றியுள்ளனர். பின்னர் அவரை ஜாமீனில் விடுதலை செய்துள்ளனர்.
மீண்டும் 23ஆம் தேதி, சென்னை மைலாப்பூரில் கிழக்கு அபிராமபுரத்தில் உள்ள தியாகி நெல்லை ஜெபமணி இல்லத்தில் தனது உண்ணாவிரத்தை தொடர்ந்தார்.
தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் சசிபெருமாளை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்தார். அப்போது உடல் நலம் குறித்து விசாரித்தார். மதுவிலக்கு கோரி தான் நடத்தி வரும் போராட்டங்கள் குறித்தும், அரசுக்கு கொடுத்து வரும் அழுத்தங்கள் குறித்தும் ராதாஸ் சசிபெருமாளிடம் கலந்துரையாடினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: