Tuesday, February 12, 2013

வினோதினி பற்றி என்ன சொல்ல போகிறார்கள்?

தென்சென்னை மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் தியாகராயநகரில் 12.02.2013 அன்று நடந்தது. இளைஞர் சங்க செயலாளர் மாம்பலம் வினோத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

காதல் கலப்பு திருமணத்தை நான் எதிர்ப்பதாக தவறான பிரசாரம் செய்கிறார்கள். 14, 15 வயதில் சீரழிவதற்கு பெயர் காதலா? காமவெறியில் உணர்வுகளை தூண்டி சீரழிகிறார்கள். பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த பரிசீலனை செய்யும்படி கர்நாடக கோர்ட்டே தீர்ப்பு வழங்கி உள்ளது. 21 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளால் தனக்கு துணையாக வருபவன் தனக்கு ஏற்றவன்தானா? என்று பகுத்தறிந்து தீர்மானிக்க முடியாது.
ஹார்மோன் கோளாறால் பாதிக்கப்படும் சிறுமிகள் ஆண்கள் வலையில் விழுந்து விடுகிறார்கள். அதன்பிறகுதான் பாதிக்கபடுகிறார்கள். தன் மகளுக்கு ஏற்ற துணையை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். காதல் திருமணம் செய்யும் போது பெற்றோர் ஒப்பதல் அவசியம். இல்லாவிட்டால் அந்த திருமணம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று அந்த தீர்ப்பில் நீதிபதிகள் பக்தவத்சலா, கோவிந்த ராஜுலு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
14-ந் தேதி காதலர் தினம் என்கிறார்கள். இதற்கு ஆதரவு திரட்ட ஒரு கூட்டம் கிளம்பி இருக்கிறது. இந்த கலாசாரம் எப்போது வந்தது? மேற்கத்திய கலாசாரத்தை பரப்புவதற்காக, பொருட்களை விற்பதற்காக பரப்பப்படும் கவர்ச்சி. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளை சீரழிக்கிறார்கள். இந்த கலாச்சாரம் வேண்டாம். நாங்கள் காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்போகிறோம் என்கிறார்களே ஆசிட் வீசி படுகொலை செய்யப்பட்ட வினோதினி பற்றி இவர்கள் என்ன சொல்ல போகிறார்கள்?
பெண்கள் படித்து வேலைக்கு சென்று சொந்த காலில் நிற்கட்டும். அதன்பிறகு காதல் வந்தால் வரட்டும். பெற்றோர் ஒப்புதலுடன் திருமணம் செய்யட்டும். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: