Tuesday, February 26, 2013

மது, புகை பழக்கத்தை கைவிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அன்புமணி பாராட்டு


சென்னை: புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்து உள்ள மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் பசுமை தாயகம் இணைந்து சுற்றுச்சூழல் மற்றும் உடல்பருமன் பற்றிய விழிப்புணர்வு கண்காட்சி நடத்தின. இந்த கண்காட்சியை முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
உலகில் மாசு அதிகரித்து வெப்பமயமாகி வருகிறது. இதை தடுக்கும் வகையில் பசுமை தாயகம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. இது தவிர மது, புகை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மது மற்றும் புகை பழக்கத்தால் தான் பட்ட துன்பங்களை யாரும் படக்கூடாது என்று நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாள் அன்று தெரிவித்திருந்தார். மேலும் மது, புகை பழக்கத்தை கைவிட்டு ரஜினிகாந்த் ஒரு முன்உதாரணமாக இருக்கிறார்.
டெல்லியைப் போன்று தமிழகத்திலும் கேஸ் வாகனங்கள் அதிக அளவில் பயன்படுத்தினால் மாசு ஏற்படாமல் இருக்கும். நம் பாரம்பரிய உணவு பழக்கங்களை விட்டுவிட்டு மேலை நாட்டு உணவு கலாச்சாரத்திற்கு மாறியதால் தான் உடல் பருமன் நோய் அதிகரித்துள்ளது. இதனால் நம் உடலுக்கு தீங்கு தான். எனவே, நாம் நமது பாரம்பரிய உணவு வழக்கத்தையே மீண்டும் கடைபிடிக்க வேண்டும். ஆரோக்கிய வாழ்விற்கு தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: