Sunday, February 10, 2013

பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து மதுவிலக்கு தான்: ராமதாஸ்


போரூர் காரம்பாக்கத்தில் பா.ம.க. சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
      தமிழ்நாட்டின் எதிர் காலம் ஒளிமயமாக வேண்டுமானால் பா.ம.க. ஆட்சிக்கு வரவேண்டும். கல்வி, விவசாயம், மருத்துவ வசதியை நோக்கி எங்கள் செயல்பாடு இருக்கும். பெண்கள் மத்தியில் பா.ம.க.வுக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது. எந்த கட்சிக்கு பெண்கள் ஆதரவு அதிகம் உள்ளதோ அந்த கட்சி வெற்றி பெற்றுவிடும்.
2016-ல் பா.ம.க. ஆட்சி அமைய வேண்டும். ஒட்டு மொத்த தமிழக மக்கள், எல்லா சமுதாய மக்களுக்கும் பா.ம.க. பாதுகாப்பாக இருக்கும். நமது மொழியையும், இனத்தையும், நாட்டையும் பாதுகாக்க வந்த கட்சி, நியாயமான கட்சி, நல்ல கட்சி, மக்களின் கட்சி பா.ம.க. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து மதுவிலக்கு தான்.
எங்களால் வெற்றிகரமாக நடத்த முடியாவிட்டால் 6 மாதத்தில் பதவியை தூக்கி எறிவோம். திராவிட கட்சிகளுக்கும், மற்ற கட்சிகளுக்கும் சவால் விடுக்கிறேன். நாங்கள் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளோம்.

நீங்களும் அதே முடிவை எடுக்க தயாரா? திராவிட கட்சிகளுடன் இனி எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது. நீங்கள் எல்லோரும் ஆதரியுங்கள். காரம்பாக்கம் பகுதி பா.ம.க.வின் கோட்டை. இதில் யாரும் எந்த விதத்திலும் ஓட்டை போட முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: