Sunday, February 17, 2013

மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் 70 சதவீத குற்றங்கள் குறையும்: அன்புமணி பேச்சு

காஞ்சீபுரம் சட்டமன்றத் தொகுதி பா.ம.க. கட்சியின் சார்பில் காஞ்சீபுரத்தில் இளம் பெண்களுக்கான பாசறைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

மாணவ-மாணவிகள் தங்களின் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். கல்வி ஒன்றே அவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் மேம்படுத்தி நல்ல எதிர்காலத்தினையும் ஏற்படுத்தி தரும். காதல் உள்ளிட்ட விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்தினால் நல்ல எதிர்காலம் அமைவது தவறி விடும்.
மதுவினால் ஏற்படும் குற்றங்கள் தற்போது அதிகரித்துள்ளது. மதுக்கடைகளை நிரந்தரமாக மூடும் போராட்டத்தினை பா.ம.க. தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. தற்போது நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்காக கால அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழக்கினையும் பாட்டாளி மக்கள் கட்சிதான் தொடுத்துள்ளதால் குறிப்பிட்ட அந்தக் காலவரைக்குள் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்முறைகள் அதிக அளவில் நடைபெறுகின்றன.

வன்முறையைத் தூண்டும் திரைப்படங்கள் அதிக அளவில் வெளியாகின்றன. குற்றங்கள் அதிகரிப்பதற்கு மதுவும் முக்கிய காரணமாக உள்ளதால் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் 70 சதவீத குற்றங்கள் குறையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: