Tuesday, February 5, 2013

சிகரெட் விளம்பரங்களை அகற்ற வேண்டும் முதல்வருக்கு அன்புமணி கடிதம்


மத்திய அரசின் உத்தரவுப்படி கடைகளில் வைக்கப்பட்டுள்ள சிகரெட் விளம்பரங்களை அகற்ற வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் :

      புகைப்பிடிக்கும் பழக்கத்தால் இந்தியாவில் நாள்தோறும் 2,500 பேர் உயிரிழக்கின்றனர். இந்திய புகையிலைக் கட்டுப்பாட்டு சட்டம் 2003-ன் கீழ் அனைத்து விதமான புகையிலைப் பொருள்கள் விளம்பரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் இச்சட்ட விதிகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன.

சிகரெட் விற்கும் கடைகாரர்கள் 60x45 செ.மீ. அளவுள்ள இங்கு புகையிலை விற்கப்படும் என்ற அறிவிப்புப் பலகை வைக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏராளமான கடைகளில் மிகப்பெரிய விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இது தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு 2 முதல் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1,000 முதல் 5,000 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கலாம்.எனவே, சிகரெட் உள்பட அனைத்து புகையிலை பொருள்கள் விளம்பரங்களை அகற்றி, இளம் தலைமுறையினரை புகையிலை பேராபத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: