Thursday, July 4, 2013

குரு மீண்டும் கைது! அன்புமணி கண்டனம்!தமிழக அரசு மீது வழக்கு தொடரவும் முடிவு!

பாமக எம்எல்ஏ ஜெ.குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மீண்டும் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.  இந்த நடவடிக்கைக்கு பாமக இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் மனு அளிக்கப் போவதாகவும் தெரிவித்ள்ளார். தேசிய பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு நீக்கிய பின்னரும் தமிழக அரசு குருவை கைது செய்திருப்பது கண்டிக்கதக்கது என தெரிவித்த அவர், இது தொடர்பாக தமிழக அரசு மீது வழக்கு தொடரப் ‌போவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் பெருவிழாவைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை தொடர்பாக ஜெ.குரு, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதனை ரத்து செய்ய மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்தநிலையில் மீண்டும் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த ஆணை காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் மூலம புழல் சிறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: