Wednesday, July 17, 2013

அனைத்து சமுதாய மக்களும் நமக்கு ஆதரவாக இருக்கின்றனர் :



பா.ம.க. கட்சியின் ஒருங்கிணைந்த காஞ்சீபுரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் செங்கல்பட்டில் மாநில துணை பொதுச் செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது.
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சக்தி கமலமம்மாள், து.மூர்த்தி, வன்னியர் சங்க மாநில துணை தலைவர் ரங்கசாமி உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பா.ம.க. மாநில இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியபோது, ’’ நாம் கட்சியை தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிறது. பா.ம.க. கட்சிக்கு வெள்ளி விழா இந்த ஆண்டு முழுவதும் பல பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும். கருத்தரங்குகளை நடத்தி நம் கட்சியை மேலும் பலப்படுத்த வேண்டும்.
சமீபத்தில் நடந்த மாமல்லபுரம் விழாவில் கட்சி தோழர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 1 மாத காலத்திற்கு மேல் சிறையில் இருந்தனர். இப்போது 122 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் 8 ஆயிரம் பேர் சிறை சென்றும் நம் கட்சிக்காக தியாகம் செய்த உங்கள் அத்துணைபேருக்கும் என்னுடைய பாராட்டுதல்களை தெரிவித்து கொள்கின்றேன்.
இந்த தியாகம் வீண் போகாது. நிச்சயமாக பாராளுமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற போகின்றோம். தமிழ்நாட்டில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இந்த நாடாளுமன்ற தொகுதி வெற்றி பெற வேண்டும். அதை நீங்கள் நிச்சயமாக நிறைவேற்ற வேண்டும். அனைத்து சமுதாய மக்களும் இன்றைக்கு நமக்கு ஆதரவாக இருக்கின்றனர். 25 ஆண்டுகள் நமது கட்சி டாக்டர் ராமதாஸ் தலைமையில் பல சாதனைகள் செய்திருக்கிறது. வேறு எந்த கட்சியும் நம்மை போன்று செய்தது கிடையாது.
சமூக நீதிக்காகவும், சமூக பிரச்சனைகளுக்காகவும் எந்த கட்சியும் இது போன்று தமிழ்நாட்டில் செய்தது கிடையாது.
பா.ம.க. கொள்கை போன்று வேறு எந்த கட்சி இருந்தது என்றால் நான் அந்த கட்சியிலேயே போய் சேர்ந்து விடுவேன் என்று டாக்டர் ராமதாஸ் சொல்லி உள்ளார். இது வரைக்கும் அது போன்ற கட்சிகள் இல்லை. இதையெல்லாம் மக்களிடம் போய் சொல்லுங்கள்.
நாம் செய்த தியாகங்கள், இட ஒதுக்கீடுக்காக, சமச்சீர் கல்விக்காக, மது ஒழிப்புக்காக, மணல் கொள்ளை க்காக, கல்வி கொள்ளைக்காக, சுற்று சூழலுக்காக இது போன்று ஒவ்வொரு ஆண்டும் வரைவு நிதிநிலை அறிக்கை பட்ஜெட்டை போட்ட ஒரே கட்சி பா.ம.க. மட்டும்தான்.
நம் கட்சியின் பெருமையை மக்களிடம் எடுத்து சொல்லுங்கள். இன்னும் இரண்டு ஆண்டுகாலம்தான். அதற்கு பிறகு எங்களுடைய ஆட்சி வரும். அதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். பா.ம.க. கட்சி ஆட்சிக்கு வரும்’’என்று தெரிவித்தார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: