Monday, July 22, 2013

குரு கைது செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட் நோட்டீஸ்



தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் பாமக எம்எல்ஏவும் வன்னியர் சங்க தலைவருமான குரு கைது செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில், மத்திய மாநில அரசுகள் 6 வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குரு கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். இந்த சட்ட நடவடிக்கையை மத்திய அரசு ரத்து  செய்த போதும் மீண்டும் குரு கைது செய்யப்பட்டார். தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டதை எதிர்த்து குரு, தனது வழக்கறிஞர்கள் மூலம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: