Saturday, February 1, 2014

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்: பாமக வலியுறுத்தல்



 


இலங்கை மீது பன்னாட்டு விசாரணை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் 2014 மார்ச் மாதம் வரவுள்ள அமெரிக்க தீர்மானம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் சென்னை தி.நகரில் சனிக்கிழமை நடைபெற்றது. பசுமைத் தாயகம், வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை, தமிழக மாணவர் சங்கம், பாட்டாளி இளைஞர் சங்கம், தமிழ்ச் சமூக ஊடகப் பேரவை ஆகியவை இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது,
இதில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகையில்,
இலங்கை பிரச்சனை தமிழகத்தில் அரசியலாகி வருகிறது. அரசியலுக்காக இந்த கூட்டத்தை நாங்கள் கூட்டவில்லை. இதையடுத்து ஒரு குழு அமைத்து 2 வாரங்களில் கையெழுத்து இயக்கம், கடிதம் எழுதும் இயக்கம், ஆர்ப்பாட்டம், போராட்டம் ஆகியவற்றை தொடர்ந்து நடத்த இருக்கிறோம்.
இலங்கைக்கு எதிராக ஏற்கனவே கொண்டு வந்த இரண்டு தீர்மானங்களும் செயலிழந்து போய்விட்டது. எனவே இந்த முறை வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும்.
இலங்கை பிரச்சனையை பொறுத்தவரை தமிழக அரசு அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்கும் வகையில் கூட்டத்தை நடத்தி ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: