Friday, February 28, 2014

8 வேட்பாளர்களை ஜெயலலிதா திரும்பப் பெற வேண்டும்: ராமதாஸ் பேச்சு



கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாமக மகளிர் அரசியல் எழுச்சி மாநாட்டில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில்,
கடலூர் உட்பட 10 தொகுதிகளில் பாமக தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. ஜெயலலிதா வன்னிய சமுதாயத்தினருக்கு எதிராக செயல்படுகிறார். இந்தநிலையில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் 8 பேர் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை அறிவித்துள்ளார்.
வன்னியர்களை அறவே வெறுக்கும் ஜெயலலிதா, அறிவித்துள்ளள 8 வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளர்களைத் திரும்பப் பெற வேண்டும். அதிமுக சார்பில் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை நிறுத்தி போட்டியிட வேண்டும் என்றார்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: