Monday, February 24, 2014

10 தொகுதிகளிலும் பா.ம.க. மட்டும் தனது தீவிர பிரசாரம்

சென்னை: இன்னும் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப் படாத நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. கட்சிகளின் தெளிவான கூட்டணி விவரங்கள் இன்னும் தெரிவிக்கப் படவில்லை. ஆனால், வேட்பாளர்களை அறிவித்த 10 தொகுதிகளிலும் பா.ம.க. மட்டும் தனது தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.தமிழகத்தில் யார் யாருடன் கூட்டணி சேருகிறார்கள் என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2 மாதத்திற்கு முன்பே 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த பா.ம.க தனது பிரசாரத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது.கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை ஒருபுறம், தேர்தல் களப்பணி மறுபுறம் என நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் பரபரப்பாகச் செயல்பட்டு வருகிறது பா.ம.க..

வேட்பாளர்கள் விவரம்... அதன்படி, சேலம்- ஆர்.அருள், ஆரணி - ஏ.கே.மூர்த்தி, கிருஷ்ணகிரி - ஜி.கே.மணி, கடலூர் - டாக்டர் கோவிந்தசாமி, அரக்கோணம் - ஆர்.வேலு, மயிலாடுமுறை - அகோரம், திருவண்ணாமலை - எதிரொலிமாறன், சிதம்பரம் - கோபி, விழுப்புரம் - வடிவேல் ராவணன், பாண்டிச்சேரி - அனந்தராமன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தீவிர பிரச்சாரம்... பா.ம.க வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் தங்களது தொகுதியில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களுக்கு ஆதரவாக பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரான டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: