Sunday, February 16, 2014

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் : ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:2009ம் ஆண்டு, ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை சர்வதேச நாடுகளுடன் இணைந்து இந்தியா தோற்கடித்தது. பின்னர் 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் இதே போன்ற தீர்மானங்களை அமெரிக்கா கொண்டு வந்த போது, அதை நீர்த்து போகச் செய்தது. இந்நிலையில் அமெரிக்கா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வரும் மார்ச் 3ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில்  கொண்டுவர உள்ளது. இந்த தீர்மானத்தை தோற்கடிக்கும் முயற்சியில் சீனா, ஜப்பான், பாகிஸ்தான், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட உள்ளதாக கூறி வருகின்றன.

எனவே  இலங்கையில் நடந்த போர்குற்றத்திற்கு எதிராக ஐநாவில் சர்வதேச விசாரணை நடத்த கோரி இந்தியா தனியாகவோ அல்லது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளோடு இணைந்தோ தீர்மானம் கொண்டு வர வேண்டும். இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்று மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து  கட்சிகளின் தலைவர்களும் ஒரே குழுவாக டெல்லி சென்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து இக்கோரிக்கைகளை வலியுறுத்த முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: