Monday, February 10, 2014

எல்லா கட்சியும் கத்திரிக்காய் பயிரிடுது. விளைந்தால் கடைக்கு வந்துதானே ஆகவேண்டும்: ராமதாஸ் பேட்டி

பாமக சார்பில் 12வது நிழல் நிதி நிலை அறிக்கையை அக்கட்சி நிறுவனர் ராமதாஸ், 10.02.2014 திங்கள்கிழமை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
கேள்வி: தேமுதிகவையும், பாமகவையும் ஒரே கூட்டணியில் இழுக்க பாஜக முயற்சி செய்கிறது. பேச்சுவார்த்தை என்ன நிலைமையில் இருக்கிறது. தேமுதிக இருக்கும் கூட்டணியில் பாமக சேர விருப்பம் உண்டா.
பதில்: உங்களுக்கு தெரியாமல் எதுவும் நடக்கப் போவதில்லை.
 
கேள்வி: தேமுதிக இடம் பெறும் அணியில் பாமக இடம்பெறுமா? தேமுதிகவை கடுமையாக விமர்சித்திருக்கிறீர்கள். ஒரு நடிகர் பின்பு போகலாமா என்று பொதுக்கூட்டங்களில் பேசியிருக்கிறீர்கள்.
பதில்: இந்த கேள்வியை அவரிடம் கேட்டிருக்கலாமே. இந்த மாதிரி கேள்விகள் கேட்பீங்கன்னு இங்க வந்த பிறகுதான் எனக்கு தெரியுது. ஆனால் இதற்கு என்ன பதில் சொல்லுவது என்று தான் எனக்கு தெரியவே இல்லை.
கேள்வி: கூட்டணி குறித்து பூர்வாங்க பேச்சுவார்த்தை நடத்தியதாக பாஜக கூறியிருக்கிறதே அதனால்தான் கேட்கிறோம்
பதில்: கத்திரிக்காய் விளைந்தால் கடைக்கு வந்துதானே ஆகவேண்டும்.
கேள்வி: கத்திரிக்காய் பயிரிடப்பட்டுவிட்டதா?
பதில்: எல்லா கட்சியும் கத்திரிக்காய் பயிரிடுது.
இவ்வாறு பதில் அளித்தார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: