Friday, January 31, 2014

தமிழகத்தில் தான், ஓட்டுகள் விற்பதும், வாங்குவதும் நடக்கிறது. அதனால், தமிழகம், அவமான சின்னமாக விளங்குகிறது,”


"தமிழகத்தில் தான், ஓட்டுகள் விற்பதும், வாங்குவதும் நடக்கிறது. அதனால், தமிழகம், அவமான சின்னமாக விளங்குகிறது,” என, பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

சேலத்தில், பா.ம.க., சார்பில், மது ஒழிப்பு குறித்த பெண்கள் மாநாட்டுக்கு தலைமை வகித்து, அக்கட்சியின் நிறுவனர், ராமதாஸ் பேசியதாவது:குழந்தைகளுக்கு ஓட்டுகள் இல்லை. ஆனால், அவர்களே, இன்று ஓட்டுகள் விற்பனைக்கு இல்லை என, தெரிவித்து வருகின்றனர். அவர்கள் தெரிவிப்பது, எங்களின் எதிர்காலத்தை விற்பனை செய்யாதீர்கள் என்பதே.கோடி, கோடியாக கொட்டி வைத்துள்ள ஊழல், லஞ்ச கறுப்பு பணம் மூலம், ஓட்டுகள், 2,000, 3,000 ரூபாய்க்கு, தேர்தல் நேரங்களில், விலை பேசப்படுகின்றன. கள்ளப் பணத்தில் இருந்து தான், ஊழல் ஆரம்பிக்கிறது.'ஆம் ஆத்மி' கட்சி, ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. ஓட்டுகளையும் விலைக்கு வாங்கவில்லை.

தமிழகத்தில், தி.மு.க.,- - அ.தி.மு.க., கட்சிகள், வெற்றிலை பாக்குடன், வெங்கடாஜலபதி படத்தை வைத்து, சத்தியம் வாங்கி, ஓட்டுக்கு, ஐந்து ரூபாய் கொடுத்து, இந்த கலாசாரத்தை துவக்கின. இதை, தி.மு.க., தான் முதலில் கொண்டு வந்தது. அதன்பின், 10 ரூபாய் துவங்கி இன்று திருமங்கலம், பென்னாகரம் தேர்தல்களில்ஓட்டுக்கு, 5,000 ரூபாய் வரை, வழங்கப்பட்டது. இதையே திருமங்கலம் பார்முலா என, கூறுகின்றனர்.பெரியண்ணா, 'டிவி' கொடுத்தாரு, இந்த அம்மா பொங்கலுக்கு, 1 கிலோ அரிசி, சர்க்கரையுடன், 100 ரூபாய் தர்றாங்க. அதை வாங்கும் உங்கள் கணவர்கள், 100 ரூபாயுடன், கூடுதலாக, 100 ரூபாய் போட்டு சாராயம் குடிக்கிறாங்க.

தமிழகத்தில், பா.ம.க., ஆட்சிக்கு வந்தால், ஒரு சொட்டு சாராயம் கூட விற்பனை செய்யப்படாது. தமிழகத்தில், 2.5 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். நீங்கள் சரியாக முடிவு எடுப்பீர்கள், உங்கள் குடும்பம் வளம் பெற, எதிர்காலத்தில் குழந்தைகளின் வாழ்வாதாரம் சிறக்க, பா.ம.க.,வை ஆதரிக்க கோரி வருகிறோம். தமிழகத்தில், தி.மு.க.,- - அ.தி.மு.க., கட்சிகளைநிரந்தரமாக ஒழிக்க வேண்டும். இவ்வாறு' அவர் பேசினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: