Thursday, January 9, 2014

பொங்கல் திருநாளையொட்டி 4 நாட்களுக்கு மதுக்கடைகளை இழுத்து மூடவேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்!



பொங்கல் திருநாளையொட்டி 4 நாட்களுக்கு மதுக்கடைகளை இழுத்து மூடவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாமக மகளிர் சங்க மாநாடு செஞ்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ராமதாஸ்,
தமிழகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும். மின்விசிறி போன்றவைகளை கேட்காமலேயே வழங்கும் திராவிட கட்சிகள், தரமான கல்வி, மருத்துவம் ஆகியவற்றை இலவசமாக வழங்காதது ஏன்?
சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு காரணம் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகளே காரணம். இந்த அரசு கொடுக்கும் ஒரு கிலோ அரிசி, அரை கிலோ சக்கரை வாங்க முடியாதா மக்களால். அரசு கொடுக்கும் அந்த நூறு ரூபாய் எங்க போகும். டாஸ்மாக் கடைக்குத்தான் போகும்.
நான் என்ன சொல்கிறேன். போகி, பெரும்பொங்கல், மாட்டு பொங்கல், காணும்பொங்கல் ஆகிய 4 நாட்களும் மதுக்கடையை இழுத்து மூட வேண்டும் என்று சொல்கிறோம் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: