Sunday, January 19, 2014

வாக்குகள் விற்பனைக்கு அல்ல; விலை பேச வர வேண்டாம் என பதாகையில் எழுதி ஓட்டி வைக்க வேண்டும்: ராமதாஸ்

 

சிதம்பரம் வடக்குமெயின் ரோடு பைசல் மஹாலில் சிதம்பரம் நாடாளுமன்ற (தனி) தொகுதி சமூக சனநாயக கூட்டணி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் கி.கோபாலகிருஷ்ணன் அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறப்புரையாற்றினார். அவர் பேசியபோது, ’’பாமக, வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த நான் எந்த சமுதாயத்தையும் எதிரியாக பார்க்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சனைகள் ஏற்பட்டால் அனைவரும் அமைதி காத்து அறிவை பயன்படுத்தி பாமக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
தேர்தல் வர இன்னும் 3 மாதங்களே உள்ளன. அதற்குள் நம்மை சிறைக்கு அனுப்பினாலும் அனுப்புவார்கள். இரண்டரை கோடி வன்னியர்கள் எனது பேச்சை கேட்டு நடந்தால் நம் சமூக பொருளாதார, கல்வி வளர்ச்சிக்காக பாடுபடுவேன். ஜனவரி 20-ம் தேதி சென்னையில் அனைத்து சாதி தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன். இதை சில ஊடகங்கள் கேலி செய்கிறது. வன்னியர் சமுதாய மக்களுடன், அனைத்து சமுதாய மக்களிடம் வாக்கு கேட்கிறேன்.
47 ஆண்டுகள் ஆண்ட திராவிட கட்சிகள் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் 10வது இடத்தில் பின்னோக்கி உள்ளது. இந்தியாவில் 1 லட்சத்து 55 ஆயிரம் கோடி கடன் சுமை உள்ள 2-வது மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நபர் மீதும் ரூ.25 ஆயிரம் கடன் உள்ளது. தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள் 13 லட்சமாக இருந்த அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை 10 லட்சமாக குறைத்து, 3 லட்சம் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பியுள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலங்களில் 1 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். ஆண்டுக்கு 20 ஆயிரம் பேருக்கு மட்டும் வேலை வழங்கப்படுகிறது. கடலூர், சிதம்பரம் தொகுதிகளில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் வன்னியர்கள் தங்களது வீடுகள் முன்பு 'எங்கள் வீட்டில் 4 வாக்குகள் உள்ளது. வாக்குகள் விற்பனைக்கு அல்ல. யாரும் விலை பேச எங்கள் வீட்டிற்கு வர வேண்டாம்' என அனைவருக்கும் தெரியும்படி பதாகையில் எழுதி ஓட்டி வைக்க வேண்டும்’’ என ச.ராமதாஸ் தெரிவித்தார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: