Saturday, January 11, 2014

அதிமுக ஆட்சியில் மக்களை ஆடு மேய்க்க வைத்துள்ளனர்: ராமதாஸ்



திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் தொகுதி அளவிலான பாமக மகளிர் மாநாடு நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசுகையில்,
பெண்களுக்கு சம வாய்ப்பு, சம அந்தஸ்து கிடைக்க பாமக போராடி வருகிறது. ஆண் படித்தால் அவருக்கு மட்டும் பயனளிக்கும். பெண் கல்வி கற்றால் வீடும், சமுதாயம் வளம்பெறும். அன்பையும், பாசத்தையும் வாரி கொடுப்பவர்கள் பெண்கள்தான். அவர்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படாமல் தூங்கிகொண்டிருக்கிறது.
அதிமுக ஆட்சியில் மக்களை ஆடு மேய்க்க வைத்துள்ளனர். நாங்கள் என்ன இலவசமாக மிக்சி, கிரைண்டர் கேட்டோமா. நல்ல கல்வியும், வேலைவாய்ப்பைத்தான் கேட்கிறோம். தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை நடக்காத நாளில்லை.
கடந்த ஓராண்டில் மட்டும் பெண்களுக்கு எதிராக 7 ஆயிரம் குற்றங்களும், 55 ஆயிரம் கொலை, கொள்ளை குற்ற வழக்குகுள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களும், இளைஞர்களும் நினைத்தால் நிச்சயம் மாற்றம் வரும் என்றார்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: