Tuesday, January 28, 2014

தே.மு.தி.க., பா.ம.க. உறுதியாக கூட்டணிக்கு வரும் என்று நம்புகிறோம்; பொன்.ராதாகிருஷ்ணன்



தே.மு.தி.க., பா.ம.க. உடன் பா.ஜனதா கட்சி நடத்தி வரும் கூட்டணி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அக்கட்சிகள் உறுதியாக கூட்டணிக்கு வரும் என்றும் நம்புவதாகவும் பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை கமலாலயத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன்,
பா.ஜனதா கட்சி பிற கட்சிகளுடன் நடத்தி வரும் கூட்டணி பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னை வண்டலூரில் வரும் 8ந் தேதி நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் 5 லட்சம் பேர் கூடுவார்கள். இதில், வெங்கையாநாயுடு எம்.பி., தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பதில்களும் வருமாறு:–
கேள்வி:– தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகளுடனான கூட்டணி பேச்சு வார்த்தை எந்த நிலையில் உள்ளது?.

பதில்:– 2 கட்சிகளுடனான கூட்டணி பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உறுதியாக கூட்டணிக்கு வருவார்கள் என்று நம்புகிறோம்.
கேள்வி:– தி.மு.க. தலைமை மீது மு.க.அழகிரி முறைகேடு புகார் கூறியுள்ளாரே?.

பதில்:– இதில் கவலைப்பட வேண்டியது கட்சியின் தலைவர் கலைஞர்தான்.

கேள்வி:– பிப்ரவரி 8ந் தேதி பா.ஜ.க. பொதுக்கூட்டத்திற்கு முன்பாக கூட்டணி இறுதி செய்யப்பட்டால், அக்கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதா?.

பதில்:– நிச்சயம் வாய்ப்பு இல்லை. வேட்பாளர்களை கட்சி தலைமைதான் முடிவெடுத்து அறிவிக்கும்.

கேள்வி:– பா.ஜ.க. மகளிரணி சார்பில் மதுவுக்கு எதிரான போராட்டம் நடத்துகிறீர்களே. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா?.

பதில்:– படிப்படியாக மதுவில் இருந்து விடுபட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: