Saturday, February 12, 2011

தமிழகம்பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்: ராமதாஸ்

சென்னை, பிப். 12: பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி, பால் உற்பத்தியாளர்கள் கடந்த ஒரு வார காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கால்நடைத் தீவனத்தின் விலை மற்றும் பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு பாலை எடுத்துச் செல்லும் வாகனச் செலவு ஆகியவை உயர்ந்து கொண்டே போகும் நிலையில், பால் கொள்முதல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாதது.

பால் கொள்முதல் விலையை உயர்த்துவதால், பால் விநியோக விலையை அரசு உயர்த்திவிடக் கூடாது. இதைச் சமாளிக்க ஆவின் நிறுவனங்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.

மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலம், மானியம் வழங்குவதால் ஏற்படும் கூடுதல் செலவை அரசு சமாளிக்கலாம்.

மேலும் பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கங்களில் பணியாற்றும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தடையாக இருந்தபோதும், அந்தத் தடையை நீக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: