Saturday, February 26, 2011

அ.தி.மு.க.வுடன் பேச்சு நடத்தவில்லை: பா.ம.க. அறிவிப்

சென்னை, பிப். 26: தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க.வுடன், பா.ம.க. எந்த ஒரு கட்டத்திலும் பேச்சு நடத்தவில்லை என்று பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வரும் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தொகுதிகளை பங்கீடு செய்வதில் பா.ம.க.-தி.மு.க இடையே சுமுகமான உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஒரே சந்திப்பில் இந்த உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது.
இந்த உடன்பாடு கையெழுத்தான நாளுக்கு முன்தினமோ, எந்த ஒரு கட்டத்திலோ பா.ம.க. தலைவர்களும், அ.தி.மு.க. தலைவர்களும் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளார் ஜி.கே. மணி

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: